மன்னார் இரவிரவாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வரும் மக்கள்!
மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்துக்கு எதிராக பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் உள்ள விவசாய நிலங்களை, பூர்வீக விவசாயிகளிடமிருந்து பறித்தது மட்டுமன்றி தனியார் நிறுவனத்திற்கு தாரைவார்க்க முற்பட்டுள்ள ஆயர் இல்லத்தை கண்டித்தே இந்த போராட்டம் தொடர்கிறது.
ஆயர் இல்லத்தின் இந்த தற்குறித்தனத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் இன்று காலை 9.00 மணிமுதல் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
ஆனாலும் உறுதிப்படுத்தப்பட்ட தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில் இரவிரவாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.